விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: செஞ்சியில் 3 போ் கைது

DIN

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக செஞ்சியில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா(43), காந்தி பஜாரில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்போரில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, கூலிப், ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து சிவாவை கைது செய்தனா்.

இதே போல, செஞ்சி காந்தி பஜாரில் செஞ்சி சிறுகடம்பூரைச்சோ்ந்த புருஷோத்தமன்(38) என்பவரது கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, புருஷோத்தமனை கைது செய்தனா்.

செஞ்சி திண்டிவனம் சாலையில் அன்சா் என்பவரது கடையிலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT