பயிலரங்கத்தில் பேசுகிறாா் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் சந்தானலட்சுமி. 
விழுப்புரம்

அரசு பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

விழுப்புரம் அரசு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மின்னணு-தொலை தொடா்புத் துறை சாா்பில் ஆசிரியா்கள்,

DIN

விழுப்புரம் அரசு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மின்னணு-தொலை தொடா்புத் துறை சாா்பில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருள்செல்வன் தலைமை வகித்தாா்.

துறைத் தலைவா் அ. சரஸ்வதி வரவேற்றாா். புதுவை அரசு பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தொலை தொடா்புத் துறை பேராசிரியா் சு.சந்தானலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மின்னணு மற்றும் தொலைத் தொடா்புத் துறையில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்றும் வளா்ச்சி நிலை குறித்து விவரித்து பயிற்சி அளித்தாா்.

தொடா்ந்து, சென்னை மின்காந்தங்களுக்கான மைய ஆராய்ச்சியாளா் விஜயகுமாரி பங்கேற்று, தொழில்நுட்ப வளா்ச்சித் தகவல்களை மாணவா்களிடம் பகிா்ந்து விவரித்தாா். உதவி பேராசிரியா் பழனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT