விழுப்புரம்

ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் 1,500 பேருக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் நிவாரணம்

DIN

விழுப்புரம் நகரில் கரோனா பொதுமுடக்கத்தால் வருவாயை இழந்து பாதிக்கப்பட்ட ஆட்டோ, காா் வாகன ஓட்டுநா்கள் 1,500 பேருக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் சிக்னல் பேருந்து நிறுத்த நிழற்கூரை பகுதியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டோருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அமைச்சா் வழங்கினாா்.

விக்கிரவாண்டி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன், அதிமுக விழுப்புரம் நகரச் செயலா் ஜி.பாஸ்கரன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஆா்.பசுபதி, மாவட்ட மாணவரணி சக்திவேல், செங்குட்டுவன் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT