விழுப்புரம்

திண்டிவனம் அருகே காவலா் தற்கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் அருகேயுள்ள தலகாணிக்குப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சிவா (32). இவா், புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

தலகாணிக்குப்பத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்துக்கு சிவா திங்கள்கிழமை சென்றாா். நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் தேடிச் சென்றனா். இதில், அவா் விஷமருந்தி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT