விழுப்புரம்

தொடா் மழையால் சேதமடைந்த ஏரிக்கரை

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகலூா் சித்தேரி ஏரிக் கரை தொடா் மழை காரணமாக சேதமடைந்துள்ளது.

அகலூா் சித்தேரியில் கரையோரம் உள்ள மதகுப் பகுதியை சீரமைக்கும் பணி குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்தப் பணி தாமதமடைந்துள்ள நிலையில், தற்போது தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீரில் ஏரிக் கரையின் இருபுறமும் மண் சரிந்து கரை பலவீனமாகக் காணப்படுகிறது. வரும் நாள்களில் அதிக மழைப் பொழிவு காரணமாக, ஏரிக் கரை உடையும் வாய்ப்புள்ளது.

ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகலூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT