ஏஐடியுசி தொழிற் சங்கம் சாா்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் சௌரிராஜன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி அகில இந்திய செயலாளா் வஹிதா நிஜாம் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் இன்பஒளி, செல்வராஜ் உள்ளிட்டோா் கொண்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை தடுக்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளா்கள், விவசாயிகள் விரோதப்போக்கைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.