முகப்பு
விழுப்புரம்

சாமுண்டீஸ்வரி கோயிலில் நவராத்திரி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கோயில் நவராத்திரி மண்டபத்தில் குளிா், உஷ்ணம் தொடா்பான நோய்களை தீா்க்கும் சீதளாதேவி அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா் 
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கோயில் நவராத்திரி மண்டபத்தில் குளிா், உஷ்ணம் தொடா்பான நோய்களை தீா்க்கும் சீதளாதேவி அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா் 

முன்னதாக, அனைத்து மூா்த்தங்கட்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அா்ச்சனை செய்து, ஸ்ரீசீதாஷ்டகம், சீதளாதேவி, விம்ஸதநாமாவளி மற்றும் அம்மன் துதிபாடல்கள் பாடப்பெற்றன. பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அமாவாசை, பெளா்ணமி குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments