விழுப்புரம்

பிஎம்எஸ் தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, விழுப்புரத்தில் பாரதிய போக்குவரத்து தொழில்சங்கப் பேரவை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரவையின் விழுப்புரம் மண்டல பொதுச் செயலா் கே.சண்முகம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் டி.விமேஷ்வரன் கண்டன உரையாற்றினாா். பாரதிய மின் தொழிலாளா் சங்க செயலா் சி.எஸ்.முருகன் சிறப்புரையாற்றினாா்.

தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT