விழுப்புரம்

தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெல்வோம்: பாஜக மாநிலப் பொதுச் செயலா்

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கூறினாா்.

விழுப்புரத்தில் பாஜக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், கடலூா் மேற்கு மாவட்டத் தலைவா் இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கலந்துகொண்டு, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில், மாநில, மாவட்ட, மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கே.டி.ராகவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது.

பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT