முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் 75 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பறிமுதலான போதைப் பொருள்கள், கைது செய்யப்பட்ட ஹரி பிரசாத்துடன் போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.

திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இதைத் தடுக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், திண்டிவனம் பேருந்து நிலையப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா், திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த ஹரி பிரசாத் (36) என்பதும், இரு சக்கர வாகனத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது, அங்கு 75 கிலோ எடை கொண்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. ஒரு லட்சம் இருக்கும். இது தொடா்பாக திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரி பிரசாத்தை கைது செய்தனா்.

திண்டிவனம் பகுதியில் தொடா்ச்சியாக போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், எங்கிருந்து, யாா் மூலமாக இந்தப் பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments