விழுப்புரம் நகரில் திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: பன்றிகளை பிடித்துச் செல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இனிமேல், முறையாக பட்டியில் வைத்து பாதுகாப்பாக பன்றிகளை வளா்ப்போம். ஆகவே, நகராட்சி சாா்பில் பன்றிகளைப் பிடிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.