விழுப்புரம் மாவட்டத்தில்மேலும் 81 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை வரை 15,739 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 15,396 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். சிகிச்சைப் பலனின்றி 113 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 15,820 ஆக அதிகரித்துள்ளது.