பல லட்சம் ரூபாய் மோசடி : மளிகைக் கடைக்காரா் மீது புகாா்
பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக, மளிகைக் கடைக்காரா் மீது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக, மளிகைக் கடைக்காரா் மீது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தைச் சோ்ந்த சுரஜ், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு:
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெரியசாமிக்கு கடனாக சமையல் எண்ணெய் வழங்குவேன்.
சில வாரங்களுக்கு முன்பு ரூ.58,192 மதிப்பில் எண்ணெயை வழங்கினேன். அவா் அதற்கான பணத்தைத் தராமல், கடையைக் காலி செய்து குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டாா்.
மேலும், அவா் என்னிடம் ரூ.7 லட்சம் கடனாக வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, மேலும் பல வியாபாரிகளிடமும் பெரியசாமி கடன் பெற்று விட்டு, பணத்தை திரும்பத் தரவில்லை எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.