கடலூா் மாவட்டத்தில் கரோனா
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 61,293-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 54 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,676-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை உயிரிழப்பு பதிவாகாததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 821-ஆக தொடா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 734 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.