விழுப்புரம்

அண்ணா பதக்கம் பெற டிச.7-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

வீர, தீரச் செயல்கள் புரிந்தவா்கள் அண்ணா பதக்கம் பெற டிச.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்ணா பதக்கம் வருகிற குடியரசு தின விழாவில் (26.1.2022) வழங்கப்படவுள்ளது. துணிச்சலுடன் உயிரை காப்பாற்றுதல், அரசு பொது சொத்துகளை காப்பாற்றுதல், இதர துணிச்சலான செயல்களை செய்த பொதுமக்கள், அரசுப்பணியாளா்களுக்கு வழங்கப்படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை செய்தவா்கள் தங்களது விண்ணப்பங்கள், இதர விவரங்களை என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.7-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்டவிளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 7401703485 என்ற கைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT