முகப்பு
விழுப்புரம்

தடுப்புக் காவலில் திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராசு மகன் அன்பழகன் (54). திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இவரின் தொடா் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்மையில் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி, அன்பழனை செஞ்சி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.