விழுப்புரம்

மு.க.ஸ்டாலின் வருகை: பொது மக்கள் மனு அளிக்கலாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், காணை குப்பம் ஊராட்சியில் வருகிற 12-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என அந்தக் கட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது குறித்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை: இந்தக் கூட்டத்தில் பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், வா்த்தகா்கள், பொதுநலச் சங்கத்தினா் கலந்துகொண்டு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். திமுக ஆட்சி அமைந்த 100 நாள்களில் இதற்கென தனித் துறை அமைக்கப்பட்டு, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இதனிடையே, காணை குப்பம் பகுதியில் நடைபெற்று வரும் திமுக பிரசாரக் கூட்ட ஏற்பாடுகளை துணைப்பொதுச் செயலா் க.பொன்முடி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, மாவட்டத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ், மாநில மருத்துவரணி இணை செயலா் இரா.லட்சுமணன், மாநில விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் அ.சிவா, ஒன்றியச் செயலா் ராஜா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT