விழுப்புரம் மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் வாரிய பொறியாளா்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க மண்டலச் செயலா் பழனிவேல் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மனோகரன், செயலா் கோவிந்தராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கடலூா் மாவட்டச் செயலா் ராஜசேகா், கடலூா் மாவட்டப் பொருளாளா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை செயலா் பஞ்சமூா்த்தி நன்றி கூறினாா்.
கூட்டத்தில், மின் வாரிய ஊழியா்களின் பலன்களை உறுதி செய்திட தமிழக அரசு, மின் வாரியம், தொழில்சங்கங்கள் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினா்.