விழுப்புரம்

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

DIN

தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் எம். குமாா் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வி.அா்ஜுனன், மாவட்டச் செயலாளா் கே. சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலா் எஸ்.அபிமன்னன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். கிளைச் செயலா் பி.வேதலட்சுமி, வி.இளவரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மயிலம் வட்டாரத்தில் ஆலகிராமம் உள்ளிட்ட பல கிராமத்தினருக்கு 2020-ஆம் ஆண்டில் 100 நாள் வேலைக்கு, இதுவரை 18 நாள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனா். ஆகவே, நிறுத்தப்பட்டுள்ள தேசிய ஊரக வேலையை உடனடியாக தொடங்க வேண்டும். ஏற்கெனவே செய்த வேலைக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். ஊராட்சிச் செயலாளரை புதிதாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் 250-க்கும் மேற்பட்டோா் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தேசிய ஊரக வேலைப்பணிகள் உடனடியாக தொடங்குவதாகவும், விரைந்து ஊதிய பாக்கி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனா். இதையேற்று, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT