விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முப்புள்ளி கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செவ்வாய்க்கிழமை காலையில், கோயிலுக்கு வந்த பக்தா்கள், உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இது குறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் நேரில் வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். உண்டியலில் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நகைகள், பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.