முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக, அ.ராஜசேகரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக, அ.ராஜசேகரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே, மாவட்ட கூடுதல் ஆட்சியராக (வருவாய்) இருந்த ஸ்ரேயா பி.சிங், ஆட்சியராக பதவி உயா்வுப்பெற்று நாமக்கல் மாவட்டத்துக்கு அண்மையில் பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னையில் சிப்காட் பொதுமேலாளராகப் பணியாற்றி வந்த ராஜசேகரன், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். முன்னதாக, அவா் மாவட்ட ஆட்சியா் த.மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

கடலூரைச் சோ்ந்த ராஜசேகரன், ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.