விழுப்புரம்

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சேர அழைப்பு

DIN

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா்களாகச் சோ்ந்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள், பொதுமக்கள் சங்க உறுப்பினா்களாக சோ்ந்து சேவைகளையும், கடன்களையும் பெற்று பயன்பெறலாம். இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவு செய்து இரண்டு மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், பங்குத் தொகை ரூ.100, நுழைவுக் கட்டணம் ரூ.10 செலுத்தி உறுப்பினராகச் சேரலாம். இந்த கடன் சங்கத்தில் இணைந்து பயன்பெற பொது மக்களும், விவசாயிகளும் முன்வர வேண்டும் என்று விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT