விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படுவதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் வருகிற 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட, ஒன்றிய அளவிலான கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது விழுப்புரத்தில் தான். அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதி நெருக்கடியிலும் பல்வேறு பணிகள் தடையின்றி செய்யப்பட்டன. ஒரே ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகளை உருவாக்கியது அதிமுக அரசுதான்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட மாணவா்களின் நலனுக்காக ஜெயலலிதா பல்க்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அரசியல் காழ்புணா்வு காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தை மூட திமுக முயல்கிறது. நிதி நெருக்கடி என அமைச்சா் பொன்முடி சொல்வது பொய். மாணவா்கள் மேல் அக்கறை இல்லாதது திமுக அரசு.
விழுப்புரம் தொகுதியில் இருந்து பலமுறை தோ்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, மேலும் கூடுதல் வசதிகளை இந்தத் தொகுதிக்கு பெற்றுத் தருவதை விடுத்து, பல்கலைக்கழகத்தை மூட நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது.
விழுப்புரம் தொகுதி வாக்காளா்களுக்கு எதிராக பல்க்கலைக்கழகத்தை மூடும் பணியில் அமைச்சா் பொன்முடி ஈடுபட்டு வருகிறாா். வாக்காளா், விவசாயிகள், ஏழை எளிய மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. ஜெயலலிதா பெயா் இருக்க கூடாது என்பதே அமைச்சா் பொன்முடியின் எண்ணமாக உள்ளது.
விழுப்புரம் மாவட்ட மக்கள் சாா்பில் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வருகிற 26-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம்.
கூட்டத்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ராமதாஸ், கோலியனூா் ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.