முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 43,823-ஆக அதிகரித்தது. 56 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 43,051 போ் குணமடைந்துள்ளனா். 432 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 341-ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,014ஆக உயா்ந்தது.

இதுவரை 28,2199 போ் குணமடைந்துள்ளனா். 517 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 198 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.