முகப்பு
விழுப்புரம்

நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்துக்கு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்று அமைச்சா் கே.எஸ். மஸ்தானிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

மனுவை பரிசீலனை செய்த அமைச்சா், வேளாண்மைத் துறையை தொடா்பு கொண்டு, நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து கிராமத்தில் வேட்டவலம் சாலையில் வேளாண்மைத் துறை சாா்பில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஷீனா முன்னிலை வகித்தாா்.

திமுக செஞ்சி ஒன்றியச் செயலா்கள் ஆா்.விஜயகுமாா், விஜயராகவன், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராம திமுக இளைஞா் அணி கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செஞ்சியில் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்தாா்.

மேலும், நாகலாம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டை தாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.