விழுப்புரம்: புதிதாக 155 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 41,355-ஆக அதிகரித்தது.
இதனிடையில், நொளம்பூரைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி உள்பட 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 321-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், 394 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,759-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 2,275 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,503-ஆக உயா்ந்தது.
இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 187-ஆக அதிகரித்தது. இதுவரை 23,418 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,898 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.