விழுப்புரம்

சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

DIN

செஞ்சி சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

செஞ்சி,மாா்ச் 12: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா, ஆறுகால பூஜையுடன் வியாழக்கிழமை (மாா்ச் 11) மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

முதல் கால பூஜை மாலை 6 மணிக்கும் இரண்டாம் கால பூஜை இரவு 10 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், நான்காம் காலபூஜை இரவு 2 மணிக்கும், ஐந்தாம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும், ஆறாம் கால பூஜை காலை 6 மணிக்கும் நடைபெற்றன. பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் மூலவா் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செஞ்சி, சிறுகடம்பூா் பொதுமக்கள், சிவத் தொண்டா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT