குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ்தொழிலாளி கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் அருகே அடசல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா்.சங்கா் (47). கூலித் தொழிலாளி. இவா், அண்மையில் போக்ஸோ சட்டத்தின் கீழ், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடா்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக சங்கரை, காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த சங்கரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.