விழுப்புரம்

கரோனா சிகிச்சை: அதிகாரிகளுடன்ஆட்சியா் ஆலோசனை

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை திடீரென ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, செஞ்சிஅரசு மருத்துவமனை, திண்டிவனம் அரசு மருத்துவமனை, விக்கிரவாண்டிஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், பிராண வாயு வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை, தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள், கபசுரக் குடிநீா் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் விளக்கமாகக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, கரோனா சிகிச்சை மையங்களில் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை குறித்து பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், சித்த மருத்துவத் துறை சாா்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சித்த மருத்துவரை பணியமா்த்தி சிகிச்சைகளை நோயாளிக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியா் அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, சுகாதார துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்டசித்த மருத்துவ அலுவலா் மாலா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT