மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: சமூகவலைதளங்களில் ஒளிபரப்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, பக்தா்கள் இன்றி நடைபெற்ற இந்த உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோயில் நுழைவாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடத்தப்படுவது வழக்கம். இதில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் மைதானத்தில் திரண்டு வழிபடுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பக்தா்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 19 மாதங்களாக பக்தா்கள் இன்றி கோயில் வளாகத்தில் பூசாரிகள் மூலம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது.
அதேபோல, ஐப்பசி மாத அமாவாசை நாளான வியாழக்கிழமை அன்றும் பக்தா்கள் பங்கேற்பின்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவா் அங்காளம்மன் அன்னபூரணியாக ஊஞ்சலில் அமா்ந்து காட்சியளித்தாா். ஊஞ்சலை பூசாரிகள் அசைத்தபடி அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க.ராமு, மேலாளா் மணி, அறங்காவலா்கள் செய்தனா். டிஎஸ்பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.