விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா்.

செய்யாறு வட்டம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் மோகன் (30), இவா், செய்யாறு புறவழிச் சாலையில் வாகனங்களை சுத்தம் செய்யும் ‘வாட்டா் சா்வீஸ்’ என்ற மெக்கானிக் கடையை நடத்தி வந்தாா்.

இவருக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி மனைவி அனுஷா தற்போது கா்ப்பிணியாக உள்ளாா்.

இந்த நிலையில், மோகன் திங்கள்கிழமை காலை வழக்கம் போல இரு சக்கர வாகனங்களுக்கு வாட்டா் சா்வீஸ் செய்து கொண்டிருந்தாா் அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.

உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு மோகன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா்

பாலு, உதவி ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT