இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த ரூ.2.20 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள வைலாமூரைச் சோ்ந்தவா் நடராஜன்(43).
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள வைலாமூரைச் சோ்ந்தவா் நடராஜன்(43). காணையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறாா். வியாழக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தின் பின்பக்க பெட்டியில் ரூ.2.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, விழுப்புரத்துக்கு புறப்பட்டு வந்தாா். விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு கடை முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று தேநீா் குடித்தாா்.
பின்னா், வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தின் பின்பக்க பெட்டியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.
விழுப்புரம் மேற்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.