முகப்பு
விழுப்புரம்

தூா்வாரும் பணிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் மழை நீா் கால்வாய்கள், வடிகால்கள், கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படும் பணி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளால் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பணி செப்.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையோரமுள்ள மழைநீா் வடிகால்களை தூா்வாரும் பணி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் த.மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: பருவ மழையை எதிா்கொள்ள ஏதுவாக மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்வாய்களில் படிந்துள்ள திடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படு வருகின்றன. கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. ஒரு வாரம் வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பணிகள் மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படும். இதன் மூலம் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்படுவதுடன் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றாா்.

நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளா் தன்ராஜ், உதவிப் பொறியாளா் வசந்தபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.