விழுப்புரம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்துஅமைச்சா் அன்பில் மகேஷ் வாக்குசேகரிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வேட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு தோ்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினாா்.

விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த நரையூரில் திறந்த ஜீப்பில் பயணித்தபடி அவா் வீதி வீதியாகச் சென்று திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, கரோனா சிறப்பு நிதி ரூ.4 ஆயிரம் வழங்கினாா்.

ஆகவே, ஊரகப் பகுதிகளில் உங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஊரக தோ்தலிலும் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினாா்.

விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன், ஒன்றியச் செயலாளா் தெய்வசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT