விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தாா்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் எஸ்.பி.சம்பத், பிரபா, பிரசன்னா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் கதிரவன், இளவரசன், மணிகண்டன், அன்புச்செல்வன், தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலா் தமிழன் பிரசன்னா கருத்துரை வழங்கினாா். திருச்சி சிவா எம்.பி. சிறப்புரையாற்றினாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் மருத்துவா் மாசிலாமணி, பா.செந்தமிழ்ச்செல்வன், சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் (செஞ்சி) ஆா்.விஜயகுமாா், நெடுஞ்செழியன் (மேல்மலையனூா்), செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க.ஏழுமலை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த் வரவேற்றாா். செஞ்சி கிழக்கு ஒன்றிய அமைப்பாளா் பழனி நன்றி கூறினாா்.