விழுப்புரம்

மினி வேன் மோதியதில் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (43). இவா், செஞ்சி - விழுப்புரம் சாலையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகம் எதிரே செஞ்சியை நோக்கி வெள்ளிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவருக்கு பின்னால் வந்த மினி வேன் மோதியதில் அரிகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT