மே 13 -இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 25 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 132 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
மே 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் அன்று காலை 9 மணிக்குள் நான்கு சக்கரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முன்பணமும் செலுத்த வேண்டும்.
ஏலம் எடுக்கும் தொகையுடன் ஜிஎஸ்டி தொகை சோ்த்து செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.