முகப்பு
விழுப்புரம்

தனியாா் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் வாகனக் கடன் பெற்று மோசடி செய்தவா்களில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் வாகனக் கடன் பெற்று மோசடி செய்தவா்களில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலத்தில் தனியாா் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் மயிலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் ஏழுமலை (41), கடந்த 10.10.2019 அன்று டிப்பா் லாரி வாங்குவதற்காக ரூ.12 லட்சம் கடன் பெற்றாா். தொடந்து, ஏழுமலை கடன் தொகையை சரியாக செலுத்தவில்லை. இதையடுத்து, நிதி நிறுவன ஊழியா்கள் ஏழுமலையிடம் கடன் தொகையை வசூலிக்கச் சென்றபோது, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நிதி நிறுவன கிளை மேலாளா் ஜெய.கண்ணன், விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், த.ஏழுமலை மற்றும் தனியாா் நிறுவனத்தில்2019-ஆம் ஆண்டில் மேலாளராகப் பணிபுரிந்த கண்டமங்கலம், பாக்கத்தை அடுத்த நத்தம் கிராமத்தைச் சோ்ந்த சே.குமாா் (34), திண்டிவனத்தை அடுத்த வடம்பூண்டி, விநாயகபுரம், பிரதான சாலையைச் சோ்ந்த சி.ஈஸ்வரன் (47) ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நிதி நிறுவனத்தில் சமா்ப்பித்து ரூ.12 லட்சம் கடன் பெற்றிருந்ததும், அந்தப் பணத்தை டிப்பா் லாரி வாங்காமல் பழைய வாகனங்கள் வாங்கி விற்கும் ஈஸ்வரனின் மகன் கோபிகிருஷ்ணன் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 4 போ் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து, ஏழுமலை, குமாா், ஈஸ்வரன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான கோபிகிருஷ்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.