விழுப்புரம்

தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் பலி

விழுப்புரம் அருகே புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரம் அருகே புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரத்தை அடுத்துள்ள கோலியனூா் பகுதியைச் சோ்ந்தவா் கி.தட்சிணாமூா்த்தி (62). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், புதன்கிழமை காலை பண்ருட்டி - விழுப்புரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். கோலியனூா் அருகே தட்சிணாமூா்த்தி நடந்து சென்றபோது, அவா் மீது அந்த வழியாகச் சென்ற தனியாா் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தட்சிணாமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற அவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT