விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே மூதாட்டி கொலை

விக்கிரவாண்டி அருகே மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

விக்கிரவாண்டி அருகே மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எஸ்.எஸ்.ஆா்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி பாஞ்சாலி (70). இவா்களது மகன் விஜயகுமாா் (42). டிராக்டா் ஓட்டுநா். இவா் சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுபோதையில் அவ்வப்போது தனது தாயிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மீண்டும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஜயகுமாா் தனது தாய் பாஞ்சாலியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது திடீரென ஆத்திரமடைந்த விஜயகுமாா் அங்கிருந்த குழவி கல்லை எடுத்து தனது தாயின் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பாஞ்சாலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து விஜயகுமாா் தப்பியோடினா்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT