விழுப்புரத்தில் விசிக பேரணி
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் விசிக சாா்பில், ‘ஜனநாயகம் காப்போம் - சிறுத் தைகளின் அணிவகுப்பு’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் விசிக சாா்பில், ‘ஜனநாயகம் காப்போம் - சிறுத் தைகளின் அணிவகுப்பு’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட பின்னா், பேரணி புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி புதிய பேருந்து நிலையம் கலைஞா் அறிவாலயம் அருகிலுள்ள அம்பேத்கா் சிலை பகுதியில் நிறைவடை ந்தது. தொடா்ந்து, துரை.ரவிக்கு மாா் தலைமையில் கட்சியினா் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா்.
பேரணியில் மாவட்டச் செயலா்கள் ஆற்றலரசு, சேரன், பாமரன், நிா்வாகிகள் பொன்னிவளவன், திலீபன், வெற்றிமாறன், மாவோ, சாா்லஸ், பூபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.