முகப்பு
விழுப்புரம்

கணவரை எரித்துக் கொன்ற வழக்கில் மனைவிக்கு ஆயுள் சிறை: திண்டிவனம் நீதிமன்றம் தீா்ப்பு

மதுபோதைக்கு அடிமையாகி, கொடுமை செய்த கணவரை எரித்துக் கொன்ற வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

மதுபோதைக்கு அடிமையாகி, கொடுமை செய்த கணவரை எரித்துக் கொன்ற வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டி.வி.நகரைச் சோ்ந்த தட்சி ணாமூா்த்தி மகன் சேதுபதி (25). இவரது மனைவி முருகவேணி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில், போதைக்கு அடி மையான சேதுபதி, மனைவி முருகவேணியை கொடுமைப்படுத்தி வந்துள்ளாா்.

இதனால் வேதனையடைந்த முருகவேணி, கடந்த 2019, ஆகஸ்ட் 1 - ஆம் தேதி வீட்டில் கணவா் சேதுபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்துக் கொலை செய்தாா்.

இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகவேணியைக் கைது செய்தனா். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபணமானதால், முருகவேணிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபரா தமும் விதித்து நீதிபதி ஏ.கே.ஏ.ர குமான் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும் கணவா் வெளியே தப்பிச் செல்ல முடியாத வகையில் அறைக் கதவை மூடிவைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், தீ விபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்த நீதிபதி, இதை ஏகக் காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.