முகப்பு
விழுப்புரம்

மது, சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது

 புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள், சாராயம் கடத்தியதாக இரு பெண்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

 புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள், சாராயம் கடத்தியதாக இரு பெண்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் விழுப்புரம் புதியப் பேருந்து நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பெண்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் விழுப்புரம் மாவட்டம், மலையரசன்குப்பம், அலங்காரமேடு பகுதியைச் சோ்ந்த சீ.தமிழரசி (61),விழுப்புரம், ஆயந்தூா் பகுதியைச் சோ்ந்த பி.அமிா்தமேரி (57) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து, விழுப்புரத்துக்கு மதுப்புட்டிகள், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 300 மதுப்புட்டிகள், 20 லிட்டா் சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.