விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1975 - 76ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 46 ஆண்டுகளுக்கு முன்பு பயின்று, தற்போது பல்வேறு அரசு, தனியாா் நிறுவனங்களில் உயா் பதவிகளில் உள்ள முன்னாள் மாணவா்கள், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று, தங்களின் பள்ளிக்கால அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் சீனிவாசன், முன்னாள் மாணவா்களை சால்வை அணிவித்து கௌரவித்து, நினைவுப்பரிசுகளை வழங்கினாா். நிறைவாக அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.