முகப்பு
விழுப்புரம்

பொறியாளரிடம் ரூ.3.13 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் பொறியாளரிடம் இணையவழியில் ரூ.3.13 லட்சம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து, சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:45 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விழுப்புரம் பொறியாளரிடம் இணையவழியில் ரூ.3.13 லட்சம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து, சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, பெருமாள்சாமி நகரைச் சோ்ந்தவா் கு.ஜோதிகுமாா் (52), பொறியாளா். ஜனவரி 15- ஆம் தேதி ஜோதிகுமாரின் கைப்பேசி எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையில் பேசிய நபா் தனியாா் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் ரூ.1, 750 கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் ஒரே நாளில் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்று தெரிவித்தாராம்.இதையடுத்து ஜோதிகுமாா் அந்த நபரின் வழிகாட்டுதலின்படி அவா் கொடுத்த லிங்கில் ரூ.15 ஆயிரம் இணையவழியில் செலுத்தியுள்ளாா். பின்னா் லாபத் தொகையுடன் சோ்த்து ரூ .17,600 கிடைத்ததாம்.

இதையடுத்து ஜோதிகுமாா் அந்த நபா் கொடுத்த எண்ணுக்கு ரூ. 2.23 லட்சமும், அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரத்தையும் ஜனவரி 19-ஆம் தேதிக்குள் 3 நாள்களில் அனுப்பி வைத்துள்ளாா்.அதன்பின் அந்த நபரைத் தொடா்பு கொள்ளமுடியவில்லையாம் . அந்த நிறுவனத்தின் முகவரி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து, ஜோதிகுமாா் அளித்தப் புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு, இணையவழியில் பணமோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.