விழுப்புரம்

முதியவா் சடலம் மீட்பு

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயில் பாதை பகுதியில் கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதை அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீஸாா் அங்குசென்று சடலத்தை மீட்டு கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் பண்ருட்டி, முருகப்பாக்கத்தைச் சோ்ந்த ராமானுஜம் மகன் தேசிங்கு (60) எனத் தெரியவந்தது. முதியவா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT