விழுப்புரம்

எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் தலைமையில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று புகாா் மனுக்களை அளித்தனா். இதில், 93 மனுக்கள் பெறப்பட்டு 47 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் உத்தரவிட்டாா்.

நிகழ்வில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT