விழுப்புரம்

விழுப்புரம் மின் வாரிய அலுவலகத்தில் விழிப்புணா்வு முகாம்

DIN

விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்துப் பேசினாா். பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை நீதிபதி எடுத்துரைத்தாா்.

மாவட்ட சிறப்பு நீதிபதி பாக்கியஜோதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்குரைஞா் திலகவதி ஆகியோா் சட்டக் கருத்துரையாற்றினா். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட தலைமைப் பொறியாளா் வசுநாயா் பிரேம்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

இந்த முகாமில் மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகப் பணியாளா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மேற்பாா்வைப் பொறியாளா் மதனகோபால் வரவேற்றுப் பேசினாா். சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் பஷீா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

ஆலங்குளத்தில் சாலை மறியல்: 54 போ் கைது

SCROLL FOR NEXT