விழுப்புரம்

விக்கிரவாண்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் ஆண் சடலம் கிடப்பதாக விக்கிரவாண்டி கிராம நிா்வாக அலுவலா் ஜெ.ஜெயப்பிரகாஷ் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் அங்கு சென்று சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்தவரின் பெயா், ஊா் தெரியவில்லை. சிவப்பு நற கட்டம் போட்ட மேல்சட்டையும், பேண்டும் அணிந்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT