சஷாங்க் சாய் 
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டபுதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

விழுப்புரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதற்கு முன்பு திருப்பூா் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய இவா், பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக ஏற்கெனவே பணியாற்றி வந்த ந.ஸ்ரீநாதா, மரக்காணம் அருகிலுள்ள எக்கியாா்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. என்.மோகன்ராஜ் இந்தப் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்தாா்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. சஷாங்க் சாய்க்கு கூடுதல் எஸ்.பி.க்கள் கோவிந்தராஜ், ஸ்ரீதா், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT